இந்தப் புத்தகத்தின் மூலமாய் உங்களைச் சந்திக்க கிருபைசெய்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். கிருபையும் சமாதானமும் உங்களில் பெருகுவதாக.
இந்த நாட்கள் பரிசுத்த ஆவியின் பின்மாரி நாட்கள். மாம்சமான யாவர் மேலும் கர்த்தர் தம்முடைய ஆவியை ஊற்றிக்கொண்டிருக்கிறார். தேசமெங்கும் பெரிய எழுப்புதல் நடந்து கொண்டிருக்கிறது ஆவியால் நிரப்பப்படுவதும், ஆவியினால் நடத்தப்படுவதும் நமக்கு கிடைத்திருக்கிற பெரிய பாக்கியங்களாகும்.
இந்தப் புத்தகத்தை எழுத நினைத்தபோது ஒரு அருமை குடும்பத்தினர் (Mr & Mrs Jeyakumar, Sandhausen, West Germany) மிக அன்போடு உதவிச் செய்ய முன்வந்தார்கள். அவர்களுடைய தியாகமான உதவியினால் இந்தப் புத்தகம் வெளியிடப்பட ஏதுவாயிற்று.
இந்தப் புத்தகத்தால் வரும் ஒவ்வொரு ஆசீர்வாதங்களும் அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் சேருவதாக. கர்த்தர் சீயோனிலிருந்து அவர்களை ஆசீர்வதிப்பாராக!
- J. சாம் ஜெபத்துரை
பொருளடக்கம்
1. ஆவியினாலே நடத்தப்படுங்கள்!
2. அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் !
3. ஆவியினாலே பிறப்பது!
4. ஆவியினாலே பேசுங்கள்!
5.ஆவியால் கட்டப்படுங்கள்!
6. ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுங்கள்!
7. பயமுள்ள ஆவி அல்ல!
8. சுத்தவானாகக் காத்துக்கொள்!
9. எதைச் செய்தாலும்...!
10. நம்பிக்கை இல்லை!
11. மங்கியெரிகிற திரி!
12. அந்த வார்த்தைகள்!
13. வேறுபாட்டின் உபதேசம்!
14. ருசித்துப் பாருங்கள்!
15. பரம ஈவு!
15. முதிர்வயதிலும் பெலன்!
17. தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்!
18 மூன்று சோதனைகள்!
19. பரீட்சைக்கு நில்லுங்கள்!
பரிசுத்த ஆவியை வாக்கு பண்ணினவரும்
பரிசுத்த ஆவியை உள்ளத்தில் ஊற்றுகிறவரும்
பரிசுத்த ஆவியினால் வழிநடத்துகிறவருமான
என், அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கே
இந்நூல் அர்ப்பணிக்கிறேன்!
பதிவிறக்கம் செய்யுங்கள், படியுங்கள் மற்றும் பகிருங்கள்.
புத்தகம் பெயர் : ஆவியினால் நடத்தப்படுங்கள் ( BE LED BY THE SPIRIT)
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்