-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

What Nepolean Bonaparte Says about Jesus Christ?

 

Nepolean Bonaparte Says about Jesus Christ in Tamil


King.Napolean Bonaparte



பிரான்ஸ் நாட்டின் சிறந்த மன்னனும், சக்கரவர்த்தியுமான 'நெப்போலியன் போன பார்ட்டே' நமது ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சொன்ன வார்த்தைகள் தான் கீழேயுள்ளது. இயேசு ஒரு சாதாரண மனிதர் தான்,அவர் தெய்வமல்ல என்று சொல்லுகிறவர்கள் கவனியுங்கள் .


"எனக்கு மனிதர்களை தெரியும் ,இயேசு கிறிஸ்து மனிதரல்ல. மேலோட்டமாய் பார்க்கிறவர்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்கும், மற்ற உலக சமய அரசியல் தலைவர்களுக்கும் ஒரு ஒற்றுமை தெரியலாம். மற்ற சமயங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் அளவிடமுடியாத இடைவெளி உள்ளது. கிறிஸ்துவைப் பற்றிய எல்லாமே என்னைத் திகைக்க வைக்கிறது. அவருடைய ஆவி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அவருடைய தீர்மானங்கள் என்னை திடுக்கிட வைக்கின்றன. உலகத்தின் மற்ற தலைவர்களை அவரோடு ஒப்பிடவே முடியாது. அவரை நெருங்க நெருங்க, ஆராய ஆராய அவர் எவ்வளவு பெரியவர் என்று உணருகிறேன். அவரைக் குறித்த எல்லாமே அற்புதம், ஆச்சரியப்படவைக்கும் அற்புதம்.அவருடைய கிறிஸ்தவத்தின் ஞானம் உயர்ந்தது, ஆனால் மனித ஞானத்தைப் போன்றது அல்ல. அது அவரிடத்தில் மாத்திரமே அவரைப்போன்ற ஒரு மாதிரி வாழ்க்கையைக் காணமுடியும். நான் சரித்திரத்தில் அவரை போன்ற ஒருவரையும், அவரை கூறும் சுவிசேஷங்களைப் போன்ற கொஞ்சமாவது அதைப் போன்ற புத்தகங்களையும் தேடிக் காணக்கிடைக்காமல் போனேன்.


மேற்கோள் :

கிறிஸ்தவத்தின் ஆதாரச் சான்றுகள், G.பவுன் பாப்பா,முதற்பதிப்பு: ஆகஸ்ட்,1986, பக்கம் : 149 - 150.


கருத்துரையிடுக

0 கருத்துகள்